Friday, March 29, 2024

அதிரை பேரூராட்சியின் துப்புரவு வாகனங்களுக்கு GPS கருவி… அசத்தும் சுகாதார ஆய்வாளர் !

Share post:

Date:

- Advertisement -

அதிராம்பட்டினம் பேரூராட்சியில் பொதுசுகாதாரத்துறைக்கு பயன்படுத்தப்படும் 4 வாகனங்களுக்கும் GPS பொருத்தும் திட்டத்தை சுகாதார ஆய்வாளர் அன்பரசன் செயல்படுத்தியுள்ளார்.

புதிதாக பொருத்தப்பட்டுள்ள GPS ட்ரேக்கிங் சிஸ்டம் மூலம் வண்டி எடுக்கப்பட்ட நேரம், வண்டி எங்கு பணியாற்றி கொண்டிருக்கிறது, எவ்வளவு தூரம் ஓடியுள்ளது, வேகம் போன்ற சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

மேலும் ஒரு நாளைக்கு எவ்வளவு மணி நேரம் வண்டி பயணிக்கிறது, இன்ஜின் எவ்வளவு மணி நேரம் ஆனில் உள்ளது, எந்த தெருவில் குப்பை அள்ளிக்கொண்டிருக்கிறது, எத்தனை முறை குப்பை சேகரிக்கும் இடத்திற்கு வண்டி வந்து சென்றது, வண்டியில் உள்ள பேட்டரி போன்ற முக்கியமான பொருட்கள் திருட்டு போகாமல் இருப்பதற்காகவும் மற்றும் பணியாளர்களின் பணியை தீவிரமாக கண்காணிப்பது போன்ற முக்கியமான அம்சங்களை இந்த GPS ட்ரேக்கிங் சிஸ்டம் மூலம் அறிந்துகொள்ளலாம்.

இந்த GPS ட்ரேக்கிங் சிஸ்டம் சுகாதார ஆய்வாளர் அன்பரசனின் கைப்பேசியுடன் இணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மேற்குறிப்பிட்ட அனைத்தையும் அவர் எந்நேரமும் கண்காணிக்கும் வகையில் திட்டம் செயல்படுத்தபட்டுள்ளது. பொதுசுகாதார பணியில் சிறப்பான திட்டத்தை செயல்படுத்தியுள்ள சுகாதார ஆய்வாளர் அன்பரசனை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.

சுகாதார ஆய்வாளர் திரு. அன்பரசன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

2024 அதிரை எக்ஸ்பிரஸ் விருதுகள் : நீங்களே சொல்லுங்க யாருக்கு கொடுக்கலாம்.??

அதிரையில் உள்ள சாதனையாளர்களை வெளிக் கொண்டு வந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக...

நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி(மைக்) சின்னம் ஒதுக்கீடு…!

மக்களவை தேர்தல் 2024 தேர்தலுக்கான பணிகளை பல்வேறு கட்சிகளும் முன்புறமாக செய்து...

அதிரை: தமிழ் நேசன் முகநூலில் அவதூறு – சைபர் கிரைம் நடவடிக்கை குற்றவாளியை நெருங்கும் போலிஸ்!

அதிராம்பட்டினத்தில் சமீப காலங்களாக முக நூலில் அவதூறு பரப்பும் தமிழ் நேசன்...

மரண அறிவிப்பு: A.சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் T.K.காதர் முகைதீன் அவர்களின் மகளும், சிங்கப்பூர் மர்ஹூம்...