Home » தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு – சன்னி வக்ஃப் வாரியம் அறிவிப்பு !

தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு – சன்னி வக்ஃப் வாரியம் அறிவிப்பு !

0 comment

மொத்த இந்தியாவும் எதிர்பார்த்து காத்திருந்த அயோத்தி பாபர் மசூதி வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று காலை தீர்ப்பளித்துள்ளது.

அதன்படி, அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் இந்துக்களுக்கு சொந்தம் என்றும், அங்கேயே ராமர் கோவில் கட்ட மத்திய அரசு, அறக்கட்டளை ஒன்றை உருவாக்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்தது.

மேலும் இஸ்லாமியர்களுக்கு சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை சுற்றியுள்ள சுமார் 67 ஏக்கர் பகுதியிலோ அல்லது அவர்கள் விரும்பக்கூடிய வேறு எந்தப் பகுதியிலோ மசூதி கட்டுவதற்கு 5 ஏக்கர் நிலம் மத்திய அரசு அல்லது மாநில அரசால் ஒதுக்கப்பட வேண்டும் என்றும் தீர்ப்பளித்தது.

இந்நிலையில் தீர்ப்பில் முரண்பாடு இருப்பதாகவும், தீர்ப்பை எதிர்த்து மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய உள்ளதாகவும் சன்னி வக்ஃப் வாரியம் அறிவித்துள்ளது.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter