Home » Breaking : பாபர் மசூதி தீர்ப்பை கண்டித்து அதிரையில் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட PFI அமைப்பினர் கைது !

Breaking : பாபர் மசூதி தீர்ப்பை கண்டித்து அதிரையில் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட PFI அமைப்பினர் கைது !

0 comment

பாபர் மசூதி வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை கண்டித்து அதிராம்பட்டினத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் சார்பில் ஆர்ப்பாட்டம் இன்று மாலை நடைபெறும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

இதனால் தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் 200க்கும் மேற்பட்ட போலீசார் அதிரையில் காலையிலேயே குவிக்கப்பட்டனர்.

ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறை தரப்பில் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அப்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட SDPI கட்சி மாநில செயலாளர் அப்துல் ஹமீது, SDPI மாநில பொதுச்செயலாளர் சஃபியா நிஜாம், PFI அமைப்பின் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் ஹாஜா அலாவுதீன் உள்பட 100க்கும் மேற்பட்ட PFI அமைப்பினர் கைது செய்யப்பட்டனர். இதனால் அதிரையில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter