அதிரை சுரைக்கா கொல்லை பகுதியில் இன்று இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
சுரைக்கா கொல்லையில் உள்ள ஒரு வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில், தீ மளமளவென பற்றியது. இதனால் வீடு முழுவதும் எரிந்து தீக்கிரையானது.
தகவல் அறிந்த அக்கம் பக்கத்தில் இருந்த இளைஞர்கள் சுமார் 50க்கும் மேற்பட்டோர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். பின்னர் பட்டுகோட்டையில் இருந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை முழுமையாக அணைத்தனர்.
மின் கசிவே தீ விபத்திற்கு காரணம் என கூறப்படுகிறது. இந்த தீ விபத்தில் அந்த வீட்டில் இருந்த ஒருவருக்கு லேசான காயம் ஏற்பட்டதாகவும், அவரை அதிரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்துள்ளனர் என்றும் கூறப்படுகிறது.