Saturday, April 20, 2024

தேசிய குடிமக்கள் பதிவேடு நடைமுறையை மே. வங்கத்தில் அனுமதிக்க மாட்டோம் – மமதா பானர்ஜி அதிரடி !

Share post:

Date:

- Advertisement -

தேசிய குடிமக்கள் பதிவேடு நடைமுறையை மேற்கு வங்கத்தில் செயல்படுத்த மாட்டோம் என அம்மாநில முதல்வர் மமதா பானர்ஜி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

ராஜ்யசபாவில் இன்று பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தேசிய குடிமக்கள் பதிவேடு நடைமுறை உச்சநீதிமன்ரத்தின் கண்காணிப்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இது நாடு முழுவதற்கும் நடைமுறைப்படுத்தப்படும் என்றார். ஆனால் அமித்ஷாவின் அறிவிப்புக்கு மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மமதா பானர்ஜி கூறுகையில், தேசிய குடிமக்கள் பதிவேட்டை நடைமுறைப்படுத்துவோம் என்ற பெயரால் மாநிலத்தின் அமைதியை சீர்குலைக்க முயற்சிக்கிறார்கள்.

ஆனால் மேற்கு வங்க மாநிலத்தில் தேசிய குடிமக்கள் பதிவேடு நடைமுறையை அனுமதிக்கமாட்டோம் என்று அதிரடியாக அறிவித்துள்ளார்.

மேலும் அஸ்ஸாமில் தேசிய குடிமக்கள் பதிவேடு நடைமுறையின் போது ஏன் இஸ்லாமியர்களும், இந்துக்களும், வங்காளிகளும் விடுபட்டார்கள் என்பதற்கான பதிலை பாஜக முதலில் சொல்லிவிட்டு பின்னர் நாடு முழுவதும் அமல்படுத்துவது குறித்து பேசட்டும் என்றும் கூறியுள்ளார்.

ஏற்கனவே தேசிய குடியுரிமை பதிவேடு விவகாரத்தில் அமித்ஷா- மமதா பானர்ஜி இருவரும் பரஸ்பரம் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். இந்த நிலையில் அமித்ஷாவுக்கு மமதா பானர்ஜி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...