Friday, April 19, 2024

மகாராஷ்டிராவில் அடுத்த திருப்பம்… துணை முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் அஜித் பவார் !

Share post:

Date:

- Advertisement -

சிவசேனா – தேசியவாத காங்கிரஸ் – காங்கிரஸ் கட்சிகள் ஒன்றாக கூட்டணி அமைத்து, மகாராஷ்ட்ராவில் ஆட்சி அமைப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வந்த நிலையில், கடந்த சனிக்கிழமை முதலமைச்சராக பாஜகவின் தேவேந்திர ஃபட்னவிசும், துணை முதலமைச்சராக தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அஜித் பவாரும் பதவியேற்றனர்.

பெரும்பான்மை இல்லாத நிலையில், ஆட்சி அமைக்கப்பட்டிருப்பதாகக் கூறி, சிவ சேனா – தேசியவாத காங்கிரஸ் – காங்கிரஸ் கட்சிகள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ், நாளை மாலை 5 மணிக்குள் சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என உத்தரவிட்டது. இந்த தீர்ப்பை அடுத்து, தேவேந்திர ஃபட்னாவிசை இன்று, அஜித் பவார் நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

நீண்ட நேர ஆலோசனையை அடுத்து, துணை முதலமைச்சர் பதவியை அஜித் பவார் ராஜினாமா செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே, இன்று மாலை தேவேந்திர ஃபட்னாவிஸ் செய்தியாளர்களைச் சந்திக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அப்போது, தேவேந்திர ஃபட்னாவிசும் தனது ராஜினமாவை அறிவிப்பார் என கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...

அதிரை சங்கை முஹம்மதின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு!

அதிரை ஆலடித்தெருவை சேர்ந்தவர் சங்கை என்கிற முகம்மது. இவர் ஷிஃபா மருத்துவமனையில்...