Thursday, March 28, 2024

சென்னையில் விடிய விடிய கொட்டித்தீர்த்த கனமழை… வெள்ளத்தில் மூழ்கிய சாலைகள் !

Share post:

Date:

- Advertisement -

சென்னையில் வடகிழக்கு பருவமழை படுதீவிரமடைந்துள்ளது. சென்னை நகரில் பல்வேறு இடங்களில் விடிய விடிய கனமழை பெய்தது.

சென்னை புறநகரில் விடிய விடிய பெய்த மழையால் பல இடங்களில் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. சென்னை தாம்பரத்தில் 6 மணிநேரத்தில் 14 செ.மீ மழை பெய்துள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.

விடிய விடிய கொட்டித் தீர்த்த கனமழை காரணமாக சென்னையின் பல்வேறு சாலைகள் வெள்ளைக்காடாக காட்சியளிக்கிறது. தாம்பரம்-வேளச்சேரி மற்றும் வேளச்சேரி-நங்கநல்லூர் பிரதான சாலைகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

மேலும் வருகிற 7ம் தேதி வரை சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பரவலாக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கனமழையால் காஞ்சிபுரம், திருவள்ளூர்,வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

2024 அதிரை எக்ஸ்பிரஸ் விருதுகள் : நீங்களே சொல்லுங்க யாருக்கு கொடுக்கலாம்.??

அதிரையில் உள்ள சாதனையாளர்களை வெளிக் கொண்டு வந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக...

நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி(மைக்) சின்னம் ஒதுக்கீடு…!

மக்களவை தேர்தல் 2024 தேர்தலுக்கான பணிகளை பல்வேறு கட்சிகளும் முன்புறமாக செய்து...

அதிரை: தமிழ் நேசன் முகநூலில் அவதூறு – சைபர் கிரைம் நடவடிக்கை குற்றவாளியை நெருங்கும் போலிஸ்!

அதிராம்பட்டினத்தில் சமீப காலங்களாக முக நூலில் அவதூறு பரப்பும் தமிழ் நேசன்...

மரண அறிவிப்பு: A.சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் T.K.காதர் முகைதீன் அவர்களின் மகளும், சிங்கப்பூர் மர்ஹூம்...