Home » தஞ்சை, திருவாரூர் உட்பட 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் – இந்திய வானிலை ஆய்வு மையம் !

தஞ்சை, திருவாரூர் உட்பட 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் – இந்திய வானிலை ஆய்வு மையம் !

0 comment

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. இதனால் கடந்த வெள்ளிக்கிழமை முதல் தமிழகத்தில் கனமழை பெய்து வருகிறது. நேற்று பெய்த கனமழையால் சென்னை உள்பட பல்வேறு பகுதிகளில் உள்ள சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளது.

இந்த நிலையில் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை தமிழகம், புதுவை, காரைக்கால் ஆகிய பகுதிகளில் கனமழை பெய்யும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இந்திய வானிலை மையம் தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் எதிரொலியாக நேற்று முதல் சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

இந்த நிலையில் சனிக்கிழமையும் ஞாயிற்றுக்கிழமையும் கனமழை பெய்யும். அடுத்த 3 நாட்களுக்கு தமிழகம் முழுவதும் கனமழை மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்யும். தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் கனமழை முதல் மிக அதிக கனமழை வரை பெய்யும்.

இந்த மழை கிழக்கு திசை நோக்கி வீசும் காற்றால் ஏற்படுகிறது. தமிழகத்தின் நாகை, திருவாரூர், தஞ்சை, ராமநாதபுரம், திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களுக்கும் புதுவை, காரைக்கால் ஆகிய பகுதிகளுக்கும் ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அது போல் காஞ்சிபுரம், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter