Friday, April 19, 2024

தஞ்சை, திருவாரூர் உட்பட 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் – இந்திய வானிலை ஆய்வு மையம் !

Share post:

Date:

- Advertisement -

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. இதனால் கடந்த வெள்ளிக்கிழமை முதல் தமிழகத்தில் கனமழை பெய்து வருகிறது. நேற்று பெய்த கனமழையால் சென்னை உள்பட பல்வேறு பகுதிகளில் உள்ள சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளது.

இந்த நிலையில் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை தமிழகம், புதுவை, காரைக்கால் ஆகிய பகுதிகளில் கனமழை பெய்யும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இந்திய வானிலை மையம் தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் எதிரொலியாக நேற்று முதல் சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

இந்த நிலையில் சனிக்கிழமையும் ஞாயிற்றுக்கிழமையும் கனமழை பெய்யும். அடுத்த 3 நாட்களுக்கு தமிழகம் முழுவதும் கனமழை மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்யும். தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் கனமழை முதல் மிக அதிக கனமழை வரை பெய்யும்.

இந்த மழை கிழக்கு திசை நோக்கி வீசும் காற்றால் ஏற்படுகிறது. தமிழகத்தின் நாகை, திருவாரூர், தஞ்சை, ராமநாதபுரம், திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களுக்கும் புதுவை, காரைக்கால் ஆகிய பகுதிகளுக்கும் ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அது போல் காஞ்சிபுரம், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...