திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகேயுள்ள ஆலங்காடு கிராமத்தில் அமைந்துள்ள வல்லம்பகாடு ரயில்வே சுரங்கப்பாதையானது தொடர்மழையினால் மூழ்கும் நிலையில் உள்ளது.
கடந்த சில தினங்களாக பெய்து வரும் தொடர்மழை காரணத்தினால் சுரங்க பாதையானது மூழ்கும் நிலை ஏற்பட்டது.
சுரங்கப்பாதை மூழ்கியதால் எளிதாக வந்து சென்றுகொண்டிருந்த கிராம வாசிகள் தற்பொழுது வெளியே வந்து செல்வதற்கு அவதிப்பட்டு வருகின்றனர்.