Home » தொடர் கனமழையால் அதிரையில் சுவர் இடிந்து விபத்து??

தொடர் கனமழையால் அதிரையில் சுவர் இடிந்து விபத்து??

0 comment

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தீவிரம் அடைந்துள்ள நிலையில், தென்மேற்கு அரபிக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு மையம் உருவாகியுள்ளதால் திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை, திருநெல்வேலி, தூத்துக்குடி, இராமநாதபுரம், திண்டுக்கல் தேனி, தஞ்சாவூர் போன்ற மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

அதிரையில் கடந்த இரு வாரங்களாகவே இடைவிடாது பெய்த கன மழையால்  குளங்கள் நிறைந்துள்ளது. நேற்று பெய்த கன மழையில் அதிரை வாய்க்கால்தெருவில் ஒரு வீட்டின் சுவர் இடிந்து விழுந்து பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

சம்பவம் நடப்பதற்கு முன் அந்த இடத்தில் தான் அப்பகுதி மக்கள் தங்களது குப்பை கூளங்களை கொட்டி வந்துள்ளனர். இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த சமூக வலைத்தளங்களில் செய்திகள் பகிரப்பட்டும் அப்பகுதி மக்கள் செவி சாய்க்காமலே இருந்து வந்துள்ள நேரத்தில், சுவர் இடிந்து விழுந்த சம்பவம் தற்போது அவர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter