அநீதியை நிறுத்து, பாபர் மஸ்ஜிதை திருப்பிக்கொடு என்ற முழக்கத்துடன் டிசம்பர் 6 நீதி வேண்டி தேசம் முழுவதும் SDPI கட்சி சார்பில் நாளை ஆர்ப்பாட்டம் நடைபெற இருக்கிறது.
அதனடிப்படையில் தஞ்சை தெற்கு மாவட்ட SDPI கட்சி சார்பில் அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் நாளை வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணியளவில் ஆர்ப்பாட்டம் நடைபெற இருக்கிறது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் SDPI கட்சியின் மாவட்ட, நகர, பேரூர் மற்றும் கிளை நிர்வாகிகள்,உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரும் கலந்துகொள்ள வேண்டும் என SDPI கட்சியினர் அழைப்பு விடுத்துள்ளனர்.