Friday, April 19, 2024

கேரல் பாடிச் சென்ற பாதிரியார்… கெட்ட வார்த்தையில் திட்டி தாக்கிய பாஜக நிர்வாகி !

Share post:

Date:

- Advertisement -

கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே உள்ளன. இதனால் அதன் கொண்டாட்டங்கள் இப்போதே தொடங்கி விட்டன.

கோவையிலும் கிறிஸ்துமஸ் தொடர்பான நிகழ்வுகள் நடந்து வருகின்றன. வேலாண்டிபாளையம் பகுதியில் கிறிஸ்துமஸ் பாடல்கள் பாடிய படி “கேரல்” குழுவினர் சென்று கொண்டு இருந்தனர்.

ஒவ்வொரு சர்ச்சிலும் உள்ள நபர்கள், இப்படி கேரல் ரவுண்ட்ஸ் கலந்து கொண்டு உற்சாகத்துடன் கிறிஸ்தவ பாடல்களை பாடியபடி செல்வர். அப்படித்தான் இவர்களும் பாடியபடி ரோட்டில் சென்று கொண்டிருந்தனர்.

இதை பார்த்த பாஜக இளைஞர் அணி செயலாளர் பிரகாஷ் எதிர்ப்பு தெரிவித்தார். “ஏன் இப்படி சத்தமா பாடிட்டு போறீங்க” என்று கேள்வி கேட்டு தகராறு செய்தார். அப்போது, கேரல் கூட்டத்தை நடத்தி வந்த ஜெபகுமார் என்ற பாதிரியாருக்கும் பிரகாஷிற்கும் வாக்குவாதம் நடந்துள்ளது. ஒரு கட்டத்தில் பிரகாஷ், ஜெபகுமாரை ஆபாசமாக பேசி மிரட்டியதுடன், கடுமையாக தாக்கியும் உள்ளார்.

பின்னர் இந்த சம்பவம் குறித்து ஜெபகுமார் போலீசில் புகார் செய்யவும், பாஜக மாவட்ட இளைஞர் அணி செயலாளர் பிரகாஷை சாய்பாபா காலனி போலீசார் கைது செய்தனர். பிரகாஷ் மீது கொலை மிரட்டல், காயம் ஏற்படுத்துதல் உட்பட 4 பிரிவுகளில் வழக்கு பதிந்து ஜெயிலிலும் அடைத்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...