விழுப்புரம் அருகே 3நம்பர் லாட்டரியினால் பாதிக்கப்பட்ட பொற்கொல்லர் ஒருவர் குடும்பத்துடன் சயனைடு தின்று தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகம் மட்டுமின்றி இந்தியாவையே சோகத்தில். ஆழ்த்தியுள்ளன.
மூன்று சிறுமிகள் உள்ளிட்ட ஐவர் கொலைக்கு காரணம் என தனது மரணத்திற்கு முன் அந்த பொற்கொல்லர் வீடியோ மூலமாக வாக்கு மூலம் அளித்துள்ளார், அதில் தாம் லாட்டரிக்கு அடிமையாகி இன்று தற்கொலை வரையில் தள்ளப்பட்டுள்ளது போன்ற வார்த்தைகள் அதில் இடம்பெற்று இருந்தன.
இதனை அடுத்து உஷாரான விழுப்புரம் காவல்துறை, கள்ள சந்தை லாட்டரி விற்பனை செய்த 16நபர்களை பிடித்து வழக்கு பதிவு செய்துள்ளனர்.
விஷயம் விபரீதமான உடன் வரிந்துகட்டும் காவல் துறை முன்னதாகவே விழித்துகொண்டு இந்த மூன்று நம்பர் லாட்டரி விற்பனையாளர்களை கைது செய்ய வேண்டும்.
அதிராம்பட்டினம் கடைதெரு தக்வாப்பள்ளி மீன் மார்கெட் உள்ளிட்ட பகுதிகளில் கொடிகட்டி பறக்கும் கள்ள சந்தை 3நம்பர் லாட்டரி விற்பனையாளர்களை கைது செய்து குண்டர் சட்டத்தில் அடைக்க வேண்டும் எனபது சமூக ஆர்வலர்களின் வேண்டுகோளாக உள்ளது.
செயல்படுத்துமா காவல்துறை?