அதிரையில் அனைத்து சமுதாய கூட்டமைப்பு சார்பில் மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தியும், மத்திய மாநில அரசுகளை கண்டித்து போராட்டம் நடத்துவது குறித்த ஆலோசனை கூட்டம் அதிராம்பட்டினம் பேருந்து நிலையம் அருகில் உள்ள அல்அமீன் பள்ளியில் நடைபெற்றது.
இதில் அதிராம்பட்டினம், மல்லிப்பட்டினம், புதுப்பட்டினம், சேதுபாவாசத்திரம், மதுக்கூர், முத்துப்பேட்டை வர்த்தக சங்கம் மற்றும் அனைத்து சமுதாய மக்களை ஒன்றிணைத்து மாபெரும் எதிர்ப்பு போராட்டம் நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் அனைத்து முஹல்லா ஜமாஅத்கள், சங்கங்கள், அரசியல் கட்சிகள், இயக்கங்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பலர் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகளும் எடுக்கப்பட்டன.
அதன்படி வருகிற 19/12/2019 வியாழக்கிழமை குடியுரிமை திருத்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி, அதிரையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் அன்றைய தினம் அதிரையில் கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்றும் அறிவித்துள்ளனர்.
கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் நாள் : 19/12/2019 வியாழக்கிழமை காலை 9.30 மணி
இடம் : தக்வா பள்வாசலில் இருந்து பேரணியாக புறப்பட்டு அதிரை பேருந்து நிலையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்
இங்ஙனம்,
அனைத்து சமுதாய கூட்டமைப்பு மற்றும் ஒருங்கிணைப்பு குழு.
தொடர்புக்கு: 8072113070, 9976238137.