மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்தும், அதனை திரும்ப பெற கோரியும் ஆஸ்திரேலியாவின் சிட்னி லாகிமாபா பகுதியில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்திய வம்சாவளி மற்றும் ஆஸ்திரேலியா வாழ் இந்தியர்கள் என ஏராளமானவர்கள் கலந்துகொண்ட இப்போராட்டத்தில், இந்திய அரசு சர்வாதிகார தன்மையை மாற்றி கொள்ள வேண்டும், இந்திய இறையான்மையை சிதைக்கும் போக்கை ஒருகாலமும் அனுமதிக்க மாட்டோம் என குரல் எழுப்பினர்.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஆஸ்திரேலியா வாழ் அதிரையர்கள் பலரும் கலந்துகொண்டு தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.