Thursday, April 18, 2024

CAA மற்றும் NRC க்கு எதிராக ஒத்துழையாமை இயக்கம் தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பு தலைவர் பி. ஜைனுல் ஆஃப்தீன் அறிவிப்பு

Share post:

Date:

- Advertisement -

இந்திய அரசியல் சாசனத்தின் அடிப்படையைத் தகர்க்கும் விதமாக, ஆர்.எஸ்.எஸ்.ஸின் செயல் திட்டத்தை நடைமுறைப் படுத்துவதற்காக மதத்தின் பெயரால் மக்களை கூறுபோடுவதற்காக மத்திய பா.ஜ.க. அரசு கொண்டுவந்துள்ள CAA என்னும் புதிய குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராகவும்,, அஸ்ஸாம் மாநிலத்தில் நடத்தப்பட்ட NRC என்னும் தேசிய குடிமக்கள் பதிவேட்டை இந்தியா முழுவதும் நடத்த இருப்பதாக பாசிச சிந்தனை கொண்ட பா.ஜ.க. வின் அறிவிப்புக்கு எதிராகவும்,

முஸ்லிம் சமுதாயம் ஒன்றுபட்டு வலிமையான போராட்டங்களை நாடு முழுவதும் நடத்தி வருகின்றது.

பெரும்பான்மை பலம் என்ற ஆணவத்தில் இருந்த மோடி, அமித்ஷா உள்ளிட்ட மத்திய மந்திரிகள் சிலரும் எதிர்ப்பின் வலிமையை உணர்ந்த பின், சுருதி குறைந்து பேசி வருவதை நாட்டு மக்கள் கண்டு வருகிறார்கள்.

ஆனால், மத்திய அரசுக்கு எதிராக போராடும் அரசியல் கட்சிகள், ஜனநாயக அமைப்புகள் உட்பட அனைத்து சமூக மக்களும் வைக்கும் கோரிக்கை CAA மற்றும் NRC ஐ திரும்பப்பெற வேண்டும் என்பது தான்.

இத்தனை வலிமையான களப் போராட்டத்தை கண்டும், கோரிக்கையை ஏற்க மோடி அரசு தயாராக இல்லை. போராட்ட வலிமையை குறைப்பதற்காக பல்வேறு பொய்யான தகவல்களையும், முரண்பாடான கருத்துக்களையும் பேசி வருகிறார்கள்.

NRC நாடு முழுவதும் செயல்படுத்தப்பட்டால், நாடு முழுவதும் முதல் பலி முஸ்லிம்கள்; தமிழகத்தில் முஸ்லிம்களுடன் சேர்ந்து இந்துக்களும் பலியாவார்கள்.

இந்திய குடிமக்கள் – குறிப்பாக முஸ்லிம்களைப் பொறுத்தவரை வாழ்வா சாவா என்று தீர்மானிக்கும் நிலையில்

மேலும் எங்கள் தொப்புள்கொடி உறவுகளான இந்து மற்றும் கிறித்தவ சமூகங்களைச் சேர்ந்த மக்களும் எங்களின் ஒத்துழையாமை இயக்கத்திற்கு ஆதரவாக எங்களோடு கரம் கோர்க்க வேண்டும் என்று அன்பான அழைப்பை விடுக்கிறோம்.
என்று தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...

அதிரை சங்கை முஹம்மதின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு!

அதிரை ஆலடித்தெருவை சேர்ந்தவர் சங்கை என்கிற முகம்மது. இவர் ஷிஃபா மருத்துவமனையில்...

மரண அறிவிப்பு : ஹாஜிமா சிராஜ் ஃபாத்திமா அவர்கள்.!!

ஆஸ்பத்திரி தெருவை சேர்ந்த மர்ஹூம் M.மஹ்மூது அலியார் ஹாஜியார் அவர்களின் மகளும்,...