தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டிணம் துறைமுகத்தில் இன்று(26.12.2019) 15வது சுனாமி நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டது.
இந்த நினைவு தினத்தில் மீனவர் பேரவை மாநில பொதுச்செயலாளர் AK.தாஜூதீன் தலைமை தாங்கினார்.இதில் நினைவு தினத்தை போற்றும் விதமாக கடலில் மலர்களை தூவியும்,மெழுகுவர்த்தி ஏற்றியும் அஞ்சலி செலுத்தினர்.இணைவோம் தொண்டு நிறுவன இயக்குனர் நன்றி கூறினார்.இந்த அஞ்சலியில் மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.