இந்திய அரசு அமல்படுத்த துடிக்கும் குடியுரிமை சட்ட திருத்தத்தை எதிர்த்து இந்தியாவை கடந்து பல்வேறு நாடுகளில் வாழும் இந்தியர்கள் கண்டன குரலை எழுப்பி வருகின்றனர்.
இந்நிலையில் வளைகுடா நாடுகளில் வாழும் இந்தியர்கள் தூதரக ரீதியிலான முன்னெடுப்பை கொண்டு தங்களது கண்டனத்தை பதிவு செய்து வருகிறார்கள்.
அமெரிக்கா கனடா உள்ளிட்ட மேலை நாடுகளில் கூட இந்த மாபாதக சட்டமான CAA,NRC,NPR ஆகியவற்றை எதிர்த்து மக்கள் களமிறங்கி போராடி உள்ளனர்.
அந்த வகையில் ஆஸ்திரேலிய வாழ் அதிரையர்கள் அங்கு நடைபெற்ற போராட்டம் ஒன்றில் கலந்துகொண்டு பதாகைகளை ஏந்திய படி போராட்டத்தில் ஈடுபட்டனர்.