Wednesday, April 24, 2024

ஹிட்லர் ஆட்சியில் நடந்த சம்பவங்கள் இந்தியாவில் நடக்கிறது அபிஜித் பானர்ஜி..!

Share post:

Date:

- Advertisement -

ஜெர்மனியில் ஹிட்லர் ஆட்சியில் நடந்ததை போன்ற சம்பவங்கள் தற்போது இந்தியாவில் நடக்க தொடங்கி உள்ளது என்று பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெற்ற இந்தியர் அபிஜித் பானர்ஜி எச்சரித்துள்ளார்.

இந்தியாவின் முக்கியமான பல்கலைக்கழகமான டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நேற்று நடந்த சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அங்கு நேற்று மாணவர்கள் மீது முகமூடி அணிந்த கும்பல் கொலைவெறி தாக்குதல் நடத்தியது. முகமூடி அணிந்த கும்பல் நேற்று மாலை பல்கலைக்கழக வளாகத்திற்குள் புகுந்து இந்த கொடூரத்தை நிகழ்த்தினார்கள்.
இந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெற்ற இந்தியர் அபிஜித் பானர்ஜி கருத்து தெரிவித்துள்ளார். அபிஜித் பானர்ஜி முன்னாள் ஜேஎன்யூ மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அபிஜித் பானர்ஜி இது தொடர்பாக அளித்துள்ள பேட்டியில், நான் படித்த ஜேஎன்யூவில் இப்போது நடந்து வரும் சம்பவங்கள் வருத்தம் அளிக்கிறது. மிகுந்த கவலை அளிக்கிறது. அரசு இது தொடர்பாக விசாரிக்க வேண்டும். அங்கு என்ன நடந்தது என்பது குறித்து தீவிரமாக விசாரித்து உண்மையை கொண்டு வர வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு :  சி.நெ.மு. சம்சுதீன் அவர்கள்..!!

புதுமனை தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சி.நெ.மு. அபூசாலிஹு அவகளின் மகனும், சி.நெ.மு....

மரண அறிவிப்பு : கதீஜா அம்மாள் அவர்கள்!

மரண அறிவிப்பு : நெசவுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மு.மு. முகம்மது சம்சுதீன்...

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...