ஏரிப்புரக்கரை ஊராட்சிக்கு கடந்த 30ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது,இதில் ஊராட்சி மன்ற தலைவராக கத்தரிக்காய் சின்னத்தில் போட்டியிட்ட சக்தி வெற்றிபெற்றார்.
இந்நிலையில் இன்று மாலை எம் எஸ் எம் நகரில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொருட்டு வீதியாக சென்றார் அப்போது எமது செய்தியாளரை சந்தித்த சக்தி, பள்ளத்தாக்கான பிலால் நகரின் அவலம் நீக்கம் செய்யப்படுவதுடன் உடனடியாக தார் சாலை அமைக்க ஓரிரு நாட்களில் பணிகள் ஆரம்பிக்க உள்ளதாக தெரிவித்தார்.
முன்னதாக எம் எஸ் எம் நகருக்கு வருகை தந்த பஞ்சாயத்து தலைவர் சக்தியை அப்பகுதி ஹனி ஷேக் வரவேற்று சால்வை அனிவித்தார்.
இந்த நன்றி அறிவிப்பு நிகழ்ச்சியில் அப்பகுதி இளைஞர்கள் ஏராளமாக கலந்து கொண்டனர்.