சென்னை தலைமை செயலகத்தில் தமிழக துணை முதல்வர் மாண்புமிகு ஓ. பன்னீர் செல்வம் அவர்களை இன்று (09.01.2020) தமிழ்நாடு இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு சார்பாக இஸ்லாமிய தலைவர்கள் சந்தித்தனர்.
இந்த சந்திப்பின் போது NPR, NRC மற்றும் CAA சட்டம் முஸ்லிம்களுக்கும், இலங்கை தமிழர்களுக்கும் பெரும் பாதிப்பு ஏற்படுத்தும் விதத்தில் உள்ளது என்பதை எடுத்துரைத்த தலைவர்கள் துணை முதலமைச்சரிடம் கோரிக்கைகள் குறித்து மனு அளித்தனர்.
இந்த சந்திப்பில் பல்வேறு இயக்க தலைவர்கள் கலந்து கொண்டனர்.