Friday, April 19, 2024

CAA,NRC,NPR ஆகிய சட்டங்களுக்கு எதிராக குடியரசு தின கிராம சபை கூட்டங்களில் தீர்மான நிறைவேற்றுக ! -அதிரை எக்ஸ்பிரஸ் கோரிக்கை-

Share post:

Date:

- Advertisement -

2020 ஜனவரி மாதம் 26 ஆம் தேதி இந்திய குடியரசு தினம் நாடெங்கிலும் கொண்டாடப்பட உள்ளது.

இந்நாளில் ஊரக உள்ளாட்சிகளில் கிராம சபை கூட்டங்களை நடத்தி முக்கிய தீர்மாணங்கள் எடுக்கப்படுவது வழக்கம்.

கடந்த சில ஆண்டுகளாக உள்ளாட்சி நிர்வாகம் கட்டமைக்கப்படாத காரணத்தால் சில தீர்மானங்களை நிறைவேற்றாமல் கிடப்பில் போடப்பட்டு வந்தன.

இந்நிலையில் கடந்த மாதம் ஊரக உள்ளாட்சி தேர்தல்கள் முடிக்கப்பட்டு கிராம பஞ்சாயத்து நிர்வாகங்கள் செயல் வடிவம் பெற்று விட்டன.

கிராம பஞ்சாயத்துகள் சார்பில் நடைபெறும் கிராம சபை கூட்டங்களை தலைவர் மற்றும் உறுப்பினர்கள் ஒப்புதலோடு அதிகாரிகள் முன்னிலையில் நடத்துவது வழக்கம்.

இச்சபையினால் ஏற்படுத்தப்பட்ட தீர்மானங்களை உரிய இலாக்காவுக்கு அதிகாரிகள் அனுப்பி வைப்பர்.

அந்த தீர்மானத்தின் மீது நடவடிக்கைகள் எடுப்பது என்பது, ஜனாதிபதியின் தீர்மானத்திற்கு ஒப்பாக கருதப்படும் அந்தஸ்த்தை பெற்றதாகும்.

இதனால் அங்கு நிறைவேற்றிய தீர்மானங்களில் 80சதவீதம் செயல் முறைக்கு வந்துள்ளன.

எனவே நமதூரை ஒட்டியுள்ள ஏரிபுறக்கரை உள்ளிட்ட கிராம சபை கூட்டங்களில் மக்கள் வெகுவாக கலந்துக்கொண்டு CAA,NRC,NPR போன்ற கொடிய சட்டங்களுக்கு எதிராக தீர்மானங்களை நிறைவேற்ற பாடுபட வேண்டும் என அதிரை எக்ஸ்பிரஸ் சார்பில் வேண்டுகோள் விடுக்கிறோம்.

இதற்காக கிராம பஞ்சாயத்து கவுன்சிலர்கள் முன்னதாகவே இதுகுறித்த திட்டமிடலை வகுத்துகொள்ள வேண்டபடுகிறது.

எனவே ஈழ தமிழர் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த தமிழின விரோத செயலில் இறங்கியுள்ள இந்த பாசிச பாஜக அரசை எதிர்த்து தீர்மானங்களை நிறைவேற்றி,இந்திய இறையாண்மைக்கு ஊறுவிளைவிக்கும் சண்டாளர்களுக்கு சம்மட்டி அடி கொடுப்போம்.

தாய் தமிழ் உறவாய் … இணைந்து வாழ்வோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...

அதிரை சங்கை முஹம்மதின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு!

அதிரை ஆலடித்தெருவை சேர்ந்தவர் சங்கை என்கிற முகம்மது. இவர் ஷிஃபா மருத்துவமனையில்...