Friday, April 19, 2024

தென் இந்தியாவில் முதன்முறையாக தஞ்சை விமானப்படை தளத்தில் சுகோய் போர் விமானப் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.

Share post:

Date:

- Advertisement -

இந்தியப் பெருங்கடல் மற்றும் வங்காள விரிகுடா பகுதிகளில் பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில், தஞ்சை விமானப்படை தளத்திற்கு சுகோய் போர் விமானத்தை அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற இந்திய தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் விமானப்படை தளபதி பதூரியா ஆகியோர் சுகோய் விமானத்தை தஞ்சை விமானப்படை தளத்திற்கு அர்ப்பணித்தனர். அப்போது விமானப்படை வீரர்களின் சாகச நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தண்ணீரை பீய்ச்சியடித்து சுகோய் விமானத்திற்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்திய பெருங்கடல் பகுதிகளில் அதிகரித்து வரும் சீனாவின் ஆதிக்கத்தை முறியடிக்கும் வகையில், தஞ்சை விமானப்படை தளத்துக்கு ஏவுகணை தாங்கிய அதிநவீன சுகோய் – 30MKI விமானம் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவில் சுகோய் விமானத்தைக் கொண்டுள்ள 12வது தளம் என்ற பெருமையை தஞ்சை விமானப்படைத்தளம் பெற்றுள்ளது. இதில் 11 விமானப்படை தளங்கள் பாகிஸ்தான் மற்றும் சீன எல்லையில் இருக்கும் நிலையில், முதன்முறையாக தென் இந்தியாவில் சுகோய் போர் விமானம் நிறுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...

அதிரை சங்கை முஹம்மதின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு!

அதிரை ஆலடித்தெருவை சேர்ந்தவர் சங்கை என்கிற முகம்மது. இவர் ஷிஃபா மருத்துவமனையில்...