எஸ்.டி.பி.ஐ. கட்சி குறித்து அவதூறு செய்திகளை பரப்பி வரும் வேலூர் இப்ராஹிம் மீது சட்ட நடவடிக்கை கோரி பட்டுக்கோட்டை துணை காவல் கண்காணிப்பாளரிடம் தஞ்சை தெற்கு மாவட்ட SDPI கட்சியினர் இன்று நேரில் வலியுத்தினர்.
தமிழ்நாடு ஏகத்துவ பிரச்சார ஜமாத் என்ற பெயரில் வேலூர் இபுராஹிம் பாஜக ஆதரவாளர் எஸ்.டி.பி.ஐ. கட்சி குறித்து தவறானவற்றை சமூகத்தின் மத்தியில் பரப்பி பொது அமைதிக்கு பங்கம் விலைவிக்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார் என்பது SDPI கட்சியினரின் குற்றச்சாட்டு.
இந்த வேலூர் இபுராஹிம் மீது சட்ட ரீதியிலான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தஞ்சை தெற்கு மாவட்ட எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பாக பட்டுக்கோட்டை துணை காவல் கண்காணிப்பாளரை தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் N.முகமது புகாரி, மாநில செயலாளர் வழக்கறிஞர் .சஃபியா, மாவட்ட பொதுச்செயலாளர் S.J.சாகுல் ஹமீது, மாவட்ட செயலாளர் ரஹீஸ், மதுக்கூர் நகர செயலாளர் அசாருதீன் ஆகியோர் மனு கொடுத்தனர்.