Home » சரபேந்திரராஜன்பட்டிணம் ஊராட்சியில் கிராம சபா கூட்டம் குறித்து அறிவிப்பு வெளியாகுமா..?

சரபேந்திரராஜன்பட்டிணம் ஊராட்சியில் கிராம சபா கூட்டம் குறித்து அறிவிப்பு வெளியாகுமா..?

by admin
0 comment

ஆண்டுக்கு நான்கு முறை(ஜன 26,மே 1,ஆக 15,அக் 2) கிராம சபா கூட்டங்கள் கூட்டி ஆக வேண்டும், அதனடிப்படையில் வருகிற ஜனவரி 26 குடியரசு தினத்தன்று நடத்தப்பட வேண்டும். கிராம சபா கூட்டங்கள் குறித்தான தகவல்களை அந்தந்த ஊராட்சியில் வசிக்கும் பொதுமக்களிடம் ஒரு வாரத்திற்கு முன்னரே ஊராட்சி நிர்வாகம் அறிவிப்புகளை தெரிவிக்க வேண்டும்,விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பது விதி ஆகும்.

அப்படியிருக்கையில் கிராம சபா கூட்டம் நடைபெற இன்னும் நான்கு நாட்களே இருக்கும் தருவாயில் கூட்டம் குறித்து எந்தவித அறிவிப்பும் ஊராட்சியில் வெளியிடாதது சமூக ஆர்வலர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.ஆகவே உடனடியாக கிராம சபா கூட்டம் குறித்தான தகவல்களை கிராம பொதுமக்களுக்கு தெரிவித்து விழிப்புணர்வு பிரச்சாரம் ஏற்படுத்த வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக இருக்கிறது.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter