Home » பாபர் மஸ்ஜித் தீர்ப்பு வழங்கிய நீதிபதி மீது பாலியல் புகார் கூறியவருக்கு மீண்டும் பணி ஆணை..!

பாபர் மஸ்ஜித் தீர்ப்பு வழங்கிய நீதிபதி மீது பாலியல் புகார் கூறியவருக்கு மீண்டும் பணி ஆணை..!

by admin
0 comment

தன்னைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்த கோகோய் முயன்றதாகவும் அதைத் தவிர்த்த காரணத்தால் தன்னையும் தனது குடும்பத்தையும் அவர் துன்புறுத்தியதாகவும் அந்த ஊழியர் தனது புகாரில் தெரிவித்திருந்தார்.

உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தன்னைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாகப் புகார் அளித்த ஊழியர் மீண்டும் பணியில் சேர்க்கப்பட்டுள்ளதாக நீதிமன்றச் செய்திகள் தெரிவிக்கின்றன.

தன்னைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்த கோகோய் முயன்றதாகவும் அதைத் தவிர்த்த காரணத்தால் தன்னையும் தனது குடும்பத்தையும் அவர் துன்புறுத்தியதாகவும் அந்த ஊழியர் தனது புகாரில் தெரிவித்திருந்தார். அவர் பணியில் இல்லாத இடைப்பட்ட காலத்தில் அவருக்குக் கொடுக்கப்பட வேண்டிய சம்பளமும் தரப்பட்டதாகத் தெரியவருகிறது.

கோகாய் மீது புகார் தெரிவித்த நிலையில் குறிப்பிட்ட அந்த ஊழியர் உச்ச நீதிமன்றத்திலேயே துறை மாற்றப்பட்டார். பிறகு, பணியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டார். அதன்பிறகு, அந்த ஊழியரின் கணவர் மற்றும் கணவரின் சகோதரர் மீது டெல்லி போலீஸ் வெவ்வேறு காரணங்களுக்காக வழக்குப் பதிவு செய்தது. தன்னையும் தங்களது குடும்பத்தையும் அச்சுறுத்தவே நீதிமன்றம் இப்படிச் செய்வதாக அந்த ஊழியர் புகார் கூறியிருந்தார்.

நன்றி விகடன்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter