நாட்டின் 71-வது குடியரசு தினவிழா இன்று தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளியில் கோலாகலமாக நடைபெற்றது.
குடியரசு தினத்தையொட்டி பள்ளி வளாகத்தில் உள்ள கொடி கம்பத்தில் தேசிய கொடி ஏற்றப்பட்டது. மேலும் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன.
இவ்விழாவில் பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.