திருச்சியை அடுத்த துவரங்குறிச்சி ஜமாஅத்துல் உலமாசபை மற்றும் அனைத்து சமூக கூட்டமைப்பின் சார்பில் குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக மாபெரும் கண்டன பொதுகூட்டம் நேற்று நடைபெற்றது.
ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்ட இக்கண்டன பொதுக்கூட்டத்தில் சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியாவின் தமிழ் மாநில தலைவர் நெல்லை முபாரக் கலந்துக்கொண்டு கண்டன உரையாற்றினார்.
இப்பொது கூட்டத்தில் சகோதர சமய மக்கள் வெகுவாக கலந்துக்கொண்டனர்.