பட்டுக்கோட்டையில் அமைந்துள்ள புனித தாமஸ் மேல்நிலைப்பள்ளியில் நேற்று ஆண்டு விழா நடைப்பெற்றது.
இவ்விழாவின் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் சி.வி. சேகர் ஆற்றிய சிறப்புரையில், தமிழகரசு கல்வி மேம்பாட்டிற்காக நல்ல திட்டங்களை வகுத்து செயல்படுத்தி வருவதாக தெரிவித்தார்.
மேலும் மாணவர்கள் கல்வியறிவில் சிறந்து விளங்கி, அரசு சலுகைகளை முழுவதுமாக பெற்று சமூகத்தில் உயர்ந்து நிற்க பிரார்த்திப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இப்பள்ளியில் பல்வேறு விளையாட்டு போட்டிகளில் வென்ற மாணாக்கர்களுக்கு பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டன. பள்ளி மாணவ,மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் கண்ணை கவரும் வண்ணம் அழகாக நடந்தேறியது.
இவ்விழாவில் பட்டிமன்ற பேச்சாளர் மதுக்கூர் ராமலிங்கம் உள்ளிட்ட பெற்றோர் ஆசிரியர் கழக பொறுப்பாளர்கள் கலந்துக்கொண்டனர்.