நாடெங்கிலும் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து கண்டனங்கள் எழுந்துள்ள நிலையில் மக்கள் ஒற்றுமை மேடை அமைப்பின் சார்பில் மாநிலம் தழுவிய மனித சங்கிலி போராட்டம் இன்று மாலை 4:30மணி முதல் சென்னை முதல் கன்னியாகுமரி வரை நடைபெற்றது.
அதனடிப்படையில் சேதுபாவாசத்திரத்தில் மனிதசங்கிலி போராட்டம் நடைபெற்றது.இப்போராட்டத்தில் அனைத்து அரசியல் கட்சி மற்றும் இயக்கங்களை சார்ந்தவர்கள் கலந்துக்கொண்டனர்.பெண்களும் கலந்துக்கொண்டு குடியுரிமை மசோதாவிற்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.