சீனாவில் பரவி வரும் கோரோனா வைரஸிலிருந்து தப்புவதற்காக சீனவில் இருந்து சொந்தநாட்டு செல்கின்றனர்.அதனைத்தொடர்ந்து சீனாவில் இருந்து டெல்லி திரும்பிய 324 பேர் தனி முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளது.
ஏர் இந்தியாவின் போயிங் பி 747 ரக சிறப்பு விமானம் மூலம் முதல் கட்டமாக 3 குழந்தைகள், 211 மாணவ-மாணவிகள் உள்பட, 324 பேர் டெல்லிக்கு அழைத்து வரப்பட்டனர்.
வர்களுக்கு கொரோனா வைரஸ் அறிகுறி உள்ளதா.. என்பது குறித்து டெல்லி விமான நிலையத்தில் மருத்துவர்கள் குழுவினர் தீவிர பரிசோதனை செய்தனர். பரிசோதனைக்குப் பின்னர் அவர்கள்டெல்லியில் உள்ள இந்தோ-திபெத்திய எல்லை காவல்படை முகாமுக்கும், டெல்லி அருகே மனேசரில் உள்ள ராணுவ முகாமுக்கும் கொண்டுசெல்லப்பட்டனர்.தனிமைப்படுத்தப்பட்டுள்ள இந்த இரு முகாம்களிலும் 324 பேரும் 14 நாட்களுக்கு மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட உள்ளனர்.