Home » குடியுரிமை சட்டத்திற்கு எதிராக வீடு வீடாக சென்று கையெழுத்து வாங்கிய ஸ்டாலின், வைகோ !(படங்கள்)

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக வீடு வீடாக சென்று கையெழுத்து வாங்கிய ஸ்டாலின், வைகோ !(படங்கள்)

0 comment

குடியுரிமைச் சட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தி சென்னை திரு.வி.க நகர் பேருந்து நிலையத்திற்கு அருகே கையெழுத்து இயக்கத்தைத் தொடங்கி வைத்தார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். அதேபோல் திமுக கூட்டணிக் கட்சி தலைவர்களும் கையெழுத்து இயக்கத்தைத் தொடங்கி வைத்தனர்.

அதன் தொடர்ச்சியாக இன்று (02/02/2020) காலை, சென்னை- துறைமுகம் தொகுதிக்குட்பட்ட கொண்டித்தோப்பு- பெருமாள் முதலி தெருவில் வீடு வீடாகச் சென்று குடியுரிமைச் சட்ட திருத்தத்திற்கு எதிராகக் கையெழுத்து வாங்கி, கையெழுத்து இயக்கத்தைத் தொடங்கி வைத்தார், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ.

மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், வடசென்னை கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட மதிமுக செயலாளர்கள் சுஜீவன், டி.சி.ராஜேந்திரன் உள்ளிட்ட அக்கட்சியின் நிர்வாகிகள் பலரும் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். பொது மக்களும் ஆர்வத்துடன் குடியுரிமைச் சட்ட திருத்தத்திற்கு எதிராக கையெழுத்திட்டு, தங்களின் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter