இந்தியா முழுவதும் குடியுரிமை திருத்த சட்டம் எதிராக போராட்டங்களும் ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்று வருகின்றன.அதைப்போன்று குடியுரிமை சட்டம் CAA ,NRC ,NPR போன்ற சட்டங்களை பற்றி விளக்கம் கருத்தரங்கம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டம் மதுக்கூரில் குடியுரிமை திருத்த சட்டம் யாருக்கு எதிரானது..? CAA, NRC, NPR நாம் ஏன் எதிர்க்க வேண்டும்.. என் தலைப்பில் மாபெரும் கருத்தரங்கம் நிகழ்ச்சி நாளை சனிக்கிழமை (08/02/2020) அன்று காலை 9.30 மணிக்கு AKM மஹாலில் நடைபெற உள்ளது.
இந்நிகழ்வில் மூத்த வழக்கறிஞர் பவானி பா. மோகன் மற்றும் பேராசிரியர் சுந்தரவள்ளி ஆகியோர் கருத்துறைகின்றனர்.
இந்நிகழ்வில் அணைத்து மக்களும் கலந்துகொள்ளுமாறு அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் ஜமாத் கூட்டமைப்பு சார்பில் அழைப்பை விடுத்துள்ளனர்.