குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறக்கோரி சென்னை வண்ணாரப்பேட்டையில் நேற்று வெள்ளிக்கிழமை போராட்டம் நடத்திய இஸ்லாமியர்கள் மீது சென்னை மாநகர காவல்துறை தடியடி நடத்தியது. இதில் பெண்கள் உள்ளிட்ட பலர் தடியடிக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் வண்ணாரப்பேட்டை தடியடியை கண்டித்தும், குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற கோரியும் தமிழகம் முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ளன.
அதன் ஒரு பகுதியாக கிருஷ்ணாஜிபட்டினத்தில் கண்டன ஆர்ப்பாட்டமும் மறியலும் நடைபெற்றது. இதில் பெண்கள், குழந்தைகள் என 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.