Home » அதிரையில் நாளை நாம் மனிதர் கட்சி சார்பில் கண்டன பொதுக்கூட்டம் !

அதிரையில் நாளை நாம் மனிதர் கட்சி சார்பில் கண்டன பொதுக்கூட்டம் !

0 comment

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாம் மனிதர் கட்சி சார்பில் நாளை 20/02/2020 மாலை 5 மணியளவில் அதிரை பேருந்து நிலையத்தில் மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.

இப்பொதுக்கூட்டத்திற்கு நாம் மனிதர் கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் சரபுதீன் M.A தலைமை வகிக்கிறார்.

நாம் மனிதர் கட்சியின் நிறுவனத் தலைவர் S. தவ்ஃபீக் (எ) இறை உதவி, அண்ணா திராவிட மக்கள் முன்னேற்ற கட்சித்தலைவர் வழ. சே. பசும்பொன் பாண்டியன் M.A.B.L, அய்யா தர்மயுக வழிப்பேரவை நிறுவனத்தலைவர் அய்யாவழி P. பாலமுருகன், தமிழக வாழ்வுரிமை கட்சி மாநில துணைத்தலைவர் H. அலிம்அல்புகாரி, தமிழக மக்கள் விடுதலை இயக்க மாநில பொதுச்செயலாளர் தங்க குமரவேல், விடுதலை சிறுத்தைகள் கட்சி வழக்கறிஞர் அணி மாநில துணை செயலாளர் கு. நெப்போலியன் ஆகியோர் பங்கேற்று கண்டன உரை ஆற்றவுள்ளார்கள்.

அதுசமயம் அனைத்து சமுதாய மக்களும் இந்த கண்டன பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும் என நாம் மனிதர் கட்சியினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

குறிப்பு : கண்டன பொதுக்கூட்டம் நமது அதிரை எக்ஸ்பிரஸ் முகநூல் பக்கத்தில் நேரலை செய்யப்படும்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter