மத்தியில் ஆளும் பாஜக அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு நாடு முழுவதிலும் பல்வேறு அரசியல் எதிர் கட்சிகள மத்தியில் எதிர்ப்பலைகள் கிளம்பியுள்ளது.
இந்த குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக தமிழக அரசும் கிரீன் சிக்னல் காட்டியுள்ளது பொது மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இதனையடுத்து நாடு முழுவதிலும் பல்வேறு அரசியல் கட்சிகள் சார்பிலும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக அதிரையை அடுத்த பட்டுக்கோட்டையில் நாளை (24.02.2020) திங்கட்கிழமை மாலை 5 மணியளவில் பட்டுக்கோட்டை காசாங்குளம் திப்புசுல்த்தான் அரங்கத்தில் கண்டன பொதுக் கூட்டம் நடைபெற இருக்கிறது.
இந்த பொதுக் கூட்டத்திற்கு திமுக செய்தி தொடர்பாளர் தமிழன் பிரசன்னா, YMJ மாநில தலைவர் பக்கீர் முகம்மது அல்தாஃபி மற்றும் பலர் கண்டன உரையாற்ற உள்ளனர்.