தமிழக மக்கள் ஒற்றுமை மேடை சார்பாக CAA,NRC,NPR சட்டங்களை திரும்ப பெற கோரி புதன் கிழமை மாலை சென்னை YMCA திடலில் திறந்த வெளி மாநாடாக குடியுரிமை பாதுகாப்பு மாநாடு நடைபெற்றது.
இதில் ஜமாத்துல் உலமா சபை தலைவர் ஹாஜா மொய்தின் ஹஜரத் அவர்கள், தமிழக எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின், புதுச்சேரி மாநில முதலமைச்சர் நாராயணசாமி, பத்தரிக்கையாளர் என். ராம், முன்னாள் பேராயர் தேவசகாயம், அய்யாவழி பால பிரஜாபதி, கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்கள். கேரள முதலமைச்சர் உடல் நிலை காரணமாக கலந்து கொள்ளவில்லை.
இதில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தலைவர் எஸ்.எம். பாக்கர், தமுமுக தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ், இந்திய தவ்ஹீத் ஜமாஅத் துணை தலைவர் முஹம்மது முனீர், எஸ்டிபிஐ தலைவர் நெல்லை முபாரக், முஸ்லிம் லீக் எம்பி நவாஸ் கனி , மமக துணை பொதுச் செயலாளர் யாக்கூப், ஐக்கிய சமாதான பேரவை பொது செயலாளர் முஜிபுர் ரஹ்மான் பாக்கவி, கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர்கள் மன்சூர் காஷிபி, பஷிர் அஹமது மக்கள் ஒற்றுமை மேடை ஒருங்கிணைப்பாளர்கள் அருணன், சுப உதயகுமார், ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் மாநிலச் செயலாளர் சிக்கந்தர், மஸ்ஜித்களின் கூட்டமைப்பு தலைவர் பஷிர் அஹமது, இப்னு சவூத், சகோதரர் தாவூத் மியான் கான், மதிமுக மல்லை சத்யா, விடுதலை சிறுத்தைகள் கட்சி வன்னியரசு, காங்கிரஸ் கட்சி போபண்ணா, மஜக தைமியா, எஸ்டிபிஐ அச உமர் பாரூக்,
இந்திய தவ்ஹீத் ஜமாஅத் மாநில செயலாளர்கள் தக்வா மொய்தின், கலிமுல்லாஹ் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.
இம்மாநாட்டில் ஆண்கள், பெண்கள், இளைஞர்கள், மாணவர்கள் என பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.