சி.ஏ.ஏ. உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் தமிழர்களுக்கு எதிராகவும் மத்திய பாஜக அரசுக்கு ஆதரவாகவும் நடிகர் ரஜினிகாந்த் கருத்துகளை தெரிவித்து வருகிறார். இதனால் ரஜினிகாந்த் மீது சிறுபான்மை மக்களின் அதிருப்தி அதிகரித்திருக்கிறது.
இந்நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை ஜமாத்துல் உலமா சபை சார்பில் நடிகர் ரஜினிகாந்தை அவரது வீட்டில் நேரில் சந்தித்தனர். அப்போது CAA, NRC, NPR சட்டங்களினால் ஏற்படும் பாதகங்களை ரஜினிக்கு ஜமாத்துல் உலமா சபை நிர்வாகிகள் விளக்கினர்.
ஜமாத்துல் உலமா சபையின் நிர்வாகிகள் மௌலவி. காஜா முயீனுத்தீன் பாகவி, மௌலவி. அன்வர் பாதுஷாஹ் உலவி, மௌலவி. முஜீபுர் ரஹ்மான் மஸ்லஹி, மௌலவி. அப்துல் அஜீஸ் பாகவி, மௌலவி. இல்யாஸ் ரியாஜி ஆகியோர் ரஜினிகாந்தை சந்தித்து பேசினர். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள், சிஏஏவை ஏன் எதிர்க்கிறோம் என்பது குறித்து ரஜினிகாந்திடம் விளக்கினோம். அவரும்புரிந்துகொண்டார். நாட்டில் அமைதியை உருவாக்க என்னால் ஆன அனைத்து வகை முயற்சிகளையும் எடுப்பேன் என உறுதியளித்தார் ரஜினிகாந்த் என்றனர்.