Wednesday, April 24, 2024

நடிகர் ரஜினியுடன் ஜமாத்துல் உலமா சபை நிர்வாகிகள் சந்திப்பு !(படங்கள்)

Share post:

Date:

- Advertisement -

சி.ஏ.ஏ. உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் தமிழர்களுக்கு எதிராகவும் மத்திய பாஜக அரசுக்கு ஆதரவாகவும் நடிகர் ரஜினிகாந்த் கருத்துகளை தெரிவித்து வருகிறார். இதனால் ரஜினிகாந்த் மீது சிறுபான்மை மக்களின் அதிருப்தி அதிகரித்திருக்கிறது.

இந்நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை ஜமாத்துல் உலமா சபை சார்பில் நடிகர் ரஜினிகாந்தை அவரது வீட்டில் நேரில் சந்தித்தனர். அப்போது CAA, NRC, NPR சட்டங்களினால் ஏற்படும் பாதகங்களை ரஜினிக்கு ஜமாத்துல் உலமா சபை நிர்வாகிகள் விளக்கினர்.

ஜமாத்துல் உலமா சபையின் நிர்வாகிகள் மௌலவி. காஜா முயீனுத்தீன் பாகவி, மௌலவி. அன்வர் பாதுஷாஹ் உலவி, மௌலவி. முஜீபுர் ரஹ்மான் மஸ்லஹி, மௌலவி. அப்துல் அஜீஸ் பாகவி, மௌலவி. இல்யாஸ் ரியாஜி ஆகியோர் ரஜினிகாந்தை சந்தித்து பேசினர். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள், சிஏஏவை ஏன் எதிர்க்கிறோம் என்பது குறித்து ரஜினிகாந்திடம் விளக்கினோம். அவரும்புரிந்துகொண்டார். நாட்டில் அமைதியை உருவாக்க என்னால் ஆன அனைத்து வகை முயற்சிகளையும் எடுப்பேன் என உறுதியளித்தார் ரஜினிகாந்த் என்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு :  சி.நெ.மு. சம்சுதீன் அவர்கள்..!!

புதுமனை தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சி.நெ.மு. அபூசாலிஹு அவகளின் மகனும், சி.நெ.மு....

மரண அறிவிப்பு : கதீஜா அம்மாள் அவர்கள்!

மரண அறிவிப்பு : நெசவுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மு.மு. முகம்மது சம்சுதீன்...

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...