Home » அதிரை ஷாஹீன் பாஃக்கில் இன்று கோவை செய்யது கர்ஜிக்கிறார்!!

அதிரை ஷாஹீன் பாஃக்கில் இன்று கோவை செய்யது கர்ஜிக்கிறார்!!

0 comment

மத்தியில் ஆளும் பாஜக அரசு கொண்டு வந்திருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் கடும் கண்டனங்கள் எழுந்து வருகிறது.

இந்த குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறக் கோரி முதலாவதாக டெல்லி ஷாஹீன் பாஃக்கில் பொதுமக்கள் தொடர் போராட்டத்தை அறிவித்தனர்.

இதனையடுத்து தமிழக தலைநகர் சென்னை வன்னாரப்பேட்டையிலும் தொடர் முழக்கப் போராட்டம் அறிவித்ததும், தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும், ஒவ்வொரு ஊராகவும் மக்களுடைய தன்னெழுச்சி தொடர் முழக்க ஷாஹீன் பாஃக் மாதிரி போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.

அதிரையில் கடந்த (19.02.2020) புதன் கிழமை மாலையில் இருந்து துவங்கிய தொடர் முழக்க போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்த தொடர் போராட்டத்தில் பத்திரிக்கையாளர் அருண் ஷோரி, ஃபக்கீர் முகம்மது அல்தாஃபி, பேராசிரியர் M.H.ஜவாஹிருல்லாஹ், போன்ற இன்னும் பல நட்சத்திர பேச்சாளர்கள் கலந்து கொண்டு உரையாற்றினர்.

13வது நாளான இன்று அதிரை தொடர் முழக்கப் போராட்டத்தில் தமுமுகவின் மாநில துணைத் தலைவர் கோவை செய்யது உரையாற்ற உள்ளது குறிப்பிடத்தக்கது.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter