தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தைச் சேர்ந்தவர் சஃபீக் அஹமது. அதிரை காதிர் முகைதீன் கல்லூரியில் 3ம் ஆண்டு படித்து வருகிறார்.
கால்பந்தின் மீது ஆர்வம் கொண்ட இவர், பல ஊர்களில் நடைபெற்ற கால்பந்து தொடரில் பங்குபெற்றுள்ளார்.
இந்நிலையில் இவருடைய சிறப்பான ஆட்டத்தால் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக அணிக்கு தேர்வாகியுள்ளார். நேஷனல் கல்லூரியில் நடைபெற்ற சிறப்பு விளையாட்டு முகாமில் பங்கேற்று, தனது திறமையை நிரூபித்து பல்கலைக்கழக அணிக்கு தேர்வாகியுள்ளார்.
பாரதிதாசன் பல்கலைக்கழக அணிக்கு அதிராம்பட்டினத்தில் இருந்து தேர்வான ஒரே வீரர் சஃபீக் அஹமது என்பது குறிப்பிடத்தக்கது.