Saturday, April 20, 2024

CAAவிற்கு அதிமுக ஆதரவளித்த விவகாரம் – அதிரையில் அமைச்சரை முற்றுகையிட்ட மக்கள் !

Share post:

Date:

- Advertisement -

அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரியில் இன்று, கல்லூரியின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் தமிழக கைத்தரித்துறை அமைச்சர் ஓ.எஸ். மணியனை சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

இந்நிலையில் CAA விற்கு ஆதரவாக அதிமுக வாக்களித்த நிலையில், அமைச்சர் ஓ.எஸ். மணியன் பங்கேற்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

நூற்றாண்டு விழா நடைபெறும் காதிர் முகைதீன் கல்லூரி முன்பு ஆண்கள், பெண்கள் என 500க்கும் மேற்பட்டோர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அமைச்சர் ஓ.எஸ். மணியனை வெளியேறக்கோரியும் கோஷங்களை எழுப்பினர்.

பின்னர் கல்லூரி விழாவை பங்கேற்றுவிட்டு அமைச்சர் ஓ.எஸ். மணியன் விரைவாக கல்லூரியைவிட்டு வெளியேறினார். இதனையடுத்து பொதுமக்கள், அமைச்சரை அழைத்த கல்லூரியை கடுமையாக கண்டித்தனர்.

இதனால் கல்லூரி நிர்வாகம் தரப்பில், பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்கப்பட்டது. இதனையடுத்து பொதுமக்கள் களைந்து சென்றனர். இதனால் ஈசிஆர் சாலையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...