CAA, NRC, NPR சட்டங்களுக்கு எதிராக தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் இன்று 26வது நாளாக ஷாஹீன் பாக் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது.
அதிரை ஜாவியா ரோட்டில் நடைபெற்று வரும் இந்த தொடர் போராட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சரும், தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினருமான எஸ்.எஸ். பழனிமாணிக்கம் MP, தமுமுக மாநில செயலாளர் திருச்சி ரஃபீக், திராவிட விடுதலை கழக பேச்சாளர் பாலமுருகன் உள்ளிட்டோர் பங்கேற்று கண்டன உரை ஆற்றினர்.
மேலும் CAA, NRC, NPR சட்டங்களுக்கு எதிராகவும், மத்திய மாநில அரசுகளை கண்டித்து கோஷங்களும் எழுப்பப்பட்டு வருகின்றன.