சென்னை வண்ணாரப்பேட்டை
ஷாகின்பாக் போராட்டமானது கடந்த மாதம் 14 ஆம் தேதி ஆரம்பித்து இன்று வரை (33 நாட்களாக) பல்வேறு இடையூறுகளுக்கு மத்தியில் இரவு பகல் பாராமல் நடைபெற்று வந்தது.
மத்திய அரசு CAA NRC NPRஐ திரும்பப் பெறவேண்டும் என்றும், தமிழக அரசு அதை எதிர்த்து சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்கிற கோரிக்கையை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்று வந்தது.
இந்நிலையில் கொரோனா தொற்று நோய் நாடு முழுவதும் பரவி வருவதால் தமிழக முழுவதும் ஷாஹின் பாக் போராட்டங்களை தற்காலியாகமாக நிறுத்தி வைக்க வேண்டும் என தமிழக அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பினர் அறிவித்துள்ளனர்.
அந்த வகையில் அசாதரண சூழலையும் நாட்டின் நன்மையையும் கருத்தில் கொண்டு நடந்த ஆலோசனையின் அடிப்படையில் CAA NRC NPRக்கு எதிராக வண்ணறப்பேட்டையில் நடைபெற்ற போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.