Home » அதிரையில் காட்டுத்தீயாக பரவி வரும் ஆடியோ – நம்ப வேண்டாம் !

அதிரையில் காட்டுத்தீயாக பரவி வரும் ஆடியோ – நம்ப வேண்டாம் !

by
0 comment

அதிரை மேலதெருவில் அமைந்துள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் மேல் இன்று இரவு 7 மணியளவில் யாரோ ஏறிச்சென்று ஏதோ மருந்தை கலந்ததாகவும், அதனால் நாளை யாரும் கார்ப்பரேஷன் தண்ணீர் அருந்த வேண்டாம் என்றும் அதிரை வாட்ஸ்அப் குழுமங்களில் ஆடியோ பதிவு ஒன்று வேகமாக பரவி வருகிறது.

அதுகுறித்து விசாரித்ததில், இன்று இரவு 7 மணியளவில் 4 சிறுவர்கள் டிக்-டாக் வீடியோ எடுப்பதற்காக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் ஏரியுள்ளனர்.

அந்த குறிப்பிட்ட சிறுவர்களை அழைத்து மேலத்தெருவாசிகள் விசாரித்ததில், அவர்கள் இவ்வாறு கூறியுள்ளனர்.

ஆகையால் அதிரையில் தற்போது காட்டுத்தீ போல பரவி வரும் அந்த ஆடியோ பதிவை நம்ப வேண்டாம் என்றும், யாரும் பிறருக்கு பகிர வேண்டாம் எனவும் மேலத்தெரு தாஜுல் இளைஞர் சங்க நிர்வாகிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter