Friday, April 19, 2024

படுபாதாளத்தில் இந்திய பொருளாதாரம் : கொரோனா மீது பழி போடும் பாஜக!!

Share post:

Date:

- Advertisement -

இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சி, மந்தநிலையை நோக்கி சென்று கொண்டிருப்பதாக பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். இது கடந்த மூன்றாண்டுகளாக தொடர்ந்து வருவதாகவும் குறிப்பிடுகின்றனர்.

கடந்த சில ஆண்டுகளில் மட்டும் நாட்டின் பல்வேறு துறைகளின் வளர்ச்சி முன்னெப்போதுமில்லாத அளவுக்கு வீழ்ச்சியை சந்தித்துள்ளது. பாஜக அரசின் புரியலில்லா பொருளாதார திட்டங்களால்தான் இந்தியா தற்போது பெருமந்தத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. ஆனால் இதனை சரி செய்ய திட்டமிடாத மத்தியில் ஆளும் பாஜக அரசு, காங்கிரஸ் கட்சிதான் காரணம் என கூறிவருகிறது.

அதுமட்டுமின்றி உலகம் முழுவதும் கொரோனா நோய் பாதிப்பு நாளுக்குநாள் அதிகரித்துள்ள நிலையில் உலக நாடுகளில் பொருளாதார மந்தம் ஏற்பட்டுவிட்டது. இந்நிலையில் கொரோனா வைரஸால், பொருளாதாரம் வீழ்ச்சி மேலும் அதிகரிக்கும் என பொருளாதார நிறுனங்கள் அச்சம் தெரிவித்துள்ளன.

கொரோனா வைரஸ் தொற்று குறித்துப் பரிசோதனை செய்வதற்கான வசதிகள் போதுமான அளவில் இல்லாத நிலையில் பல நாடுகள் உள்ளன. இந்தியாவில் மார்ச் 18 அன்று 151 பேர் பாதிக்கப்பட்டதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. சுற்றுலாப் பயணிகளுக்கு கட்டுப்பாடு மற்றும் தடைகள், பள்ளிக்கூடங்கள் மூடியிருத்தல், சமூக ரீதியாக ஒதுங்கியிருத்தல் போன்றவை ஏற்கனவே பொருளாதாரத்திலும் கடும் விளைவுகளை ஏற்படுத்தி உள்ளது. வேலைதேடி புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு வேலை இல்லை.

கட்டுமானத்துறை, ஓட்டல்கள், விடுதிகள், சுற்றுலாத்துறை மற்றும் பல துறைகளில் மூடப்பட்டுள்ளதால் பெரும் நெருக்கடிகளை சந்திக்க நேரிடும். கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை அடுத்து இயல்பு வாழ்க்கையும் முடக்கப்பட்டிருப்பதால், மேலும் பல தொழிற்சாலைகளும், தொழில் நிறுவனங்களும் மூடப்பட்டுக்கொண்டிருக்கின்றன.

இத்தகைய நிலைமையை எதிர்கொள்வதற்கு ஒருங்கிணைந்த திட்டங்களை மத்திய பாஜக அரசு உருவாக்கவில்லை.

இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்னர், கொரோனா விழிப்புணர்வு குறித்து பேசிய மோடி, “கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாட்டின் பொருளாதாரத்தின் சரிவை மீட்டெடுக்க நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் தடுப்புப்படை அமைக்கப்பட்டு சரி செய்யப்படும்” என கூறியுந்தார்.

உயிரிழப்புகள் வேகமாகப் பரவுவதற்குமுன், அரசு அவசர நடவடிக்கைகளை எடுக்கும் என எதிர்பார்க்கும்போது, பொருளாதாரம் மந்த நிலை ஏற்பட்டுள்ளதற்கு காரணம் கொரோனா வைரஸ்தான் என பாஜக பழிப்போட்டுள்ளது.

ஆக்கம்,

இர்ஷாத் இப்னு ஜஹபர் அலி

அதிரை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...

அதிரை சங்கை முஹம்மதின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு!

அதிரை ஆலடித்தெருவை சேர்ந்தவர் சங்கை என்கிற முகம்மது. இவர் ஷிஃபா மருத்துவமனையில்...