Home » அதிரையில் இரட்டிப்பு விலையேற்றம் செய்யும் வியாபாரிகள்..!

அதிரையில் இரட்டிப்பு விலையேற்றம் செய்யும் வியாபாரிகள்..!

by admin
0 comment

நாளை மாலை முதல் தமிழகம் முழுவதும் 144 உத்தரவு பிறப்பித்து இருக்கிறது தமிழக அரசு.இந்த உத்தரவில் மளிகை,காய்கறி,மருந்து கடை என அத்தியாவசிய கடைகள் திறந்து இருக்கும் என்று அரசு அறிவுறுத்தி இருக்கிறது.

இந்நிலையில் பொதுமக்கள் அச்சத்தின் காரணமாக முன்னெச்சரிக்கையாக காய்கறிகள் போன்ற அத்தியாவசிய பொருட்களை அதிரை பொதுமக்கள் வாங்கி வருகின்றனர்.

இதனை பயன்படுத்தி விற்பனை செய்பவர்கள் விலையை இரட்டிப்பு மடங்காக உயர்த்தி இருப்பதாக அதிரை பொதுமக்கள் காய்கறி வியாபாரிகள் மீது குற்றஞ்சாட்டினர். நேற்று முன்தினம் இன்று காலை ரூபாய் 15,20 விற்ற தக்காளி 30 ரூபாய்க்கு விற்று வருகின்றனர். இதனை அதிகாரிகள் கண்காணித்து விலையேற்றம் செய்து விற்கும் உரிய கடைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது இல்லத்தரசிகளின் கோரிக்கையாக இருக்கிறது.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter