கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், அதிரை அனைத்து முஹல்லா மற்றும் அனைத்து உலமாக்கள் பங்கேற்ற முக்கிய ஆலோசனை கூட்டம் இன்று மஹ்ரிப் தொழுகைக்கு பிறகு மரைக்கா பள்ளியில் நடைபெற்றது.
இதில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. அவை,
◆நாளை முதல் அதிராம்பட்டினத்தில் உள்ள அனைத்து பள்ளி வாசல்களிலும் ஐந்து வேலை தொழுகையும் பாங்கு சொல்லப்பட்டு அடுத்த 10 நிமிடத்தில் தொழுகை நடைபெறும்.
◆பள்ளிவாசல்களுக்கு அருகில் இருப்போர் பள்ளிக்கு சென்று ஜமாஅத்தாக தொழுது கொள்ளவும். தூரத்தில் இருப்போர், வயோதிகர்கள் மற்றும் சிறார்கள் பள்ளிக்கு வருவதை தவிர்த்து கொள்வது சிறந்தது
◆வருகின்ற வார ஜும்மா தொழுகையானது 12:30 மணிக்கு பாங்கு சொல்லப்பட்டு 12:40 ஜுமுஆ (நேரடியாக) தமிழ் பயான் இல்லாமல் தொழுகை நடத்தப்படும்.
◆முக்கியமாக பள்ளி வாசல்களில் வீண் கூட்டங்களை தவிர்த்து கொள்ளவுமாறும் அனைத்து முஹல்லா சார்பில் கேட்டு கொண்டுள்ளனர்.
◆ஜுமுஆ குறித்து (அன்றைய நிலைமையை கருத்தில் கொண்டு) வியாழன் அன்று உறுதி செய்யப்படும்.