Home » லாக்டவுனுக்கு இடையே அயோத்தியில் ராமர் சிலைக்கு பூஜை செய்த யோகி ஆதித்யநாத் !

லாக்டவுனுக்கு இடையே அயோத்தியில் ராமர் சிலைக்கு பூஜை செய்த யோகி ஆதித்யநாத் !

0 comment

கொரோனா தாக்கத்தால் நாடு முழுவதும் லாக்டவுன் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 14-ந் தேதி முதல் இது நடைமுறையில் இருக்கும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

இந்த 21 நாட்களும் அனைவரும் வீடுகளில்தான் இருக்க வேண்டும்; வீட்டை விட்டு வெளியே வருவதையே மறந்துவிட வேண்டும் என்றும் பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார். இதனையடுத்து நள்ளிரவு முதல் நாடு முழுவதும் லாக்டவுன் நடைமுறைக்கு வந்தது.

நாட்டின் அனைத்து பகுதிகளிலும் லாக்டவுனை போலீசார் தீவிரமாக அமல்படுத்தியும் வருகின்றனர்.

இந்த நிலையில் அயோத்தியில் இன்று அதிகாலை உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் சாமியார்கள் அடங்கிய குழு சிறப்பு பூஜை நடத்தியது. அயோத்தியில் 27 ஆண்டுகளுக்கு முன்னர் பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் வைக்கப்பட்ட ராமர் சிலை அங்கிருந்து எடுக்கப்பட்டது. பின்னர் புதிய கோவில் கட்டக் கூடிய இடத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.

பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று ஒட்டு மொத்த நாட்டு மக்களும் தங்களை வீடுகளுக்குள் முடக்கியிருக்கும் நிலையில், அவர் சார்ந்த பாஜகவின் ஒரு மாநில முதல்வரே இதுபோல் பொதுநிகழ்ச்சியில் பங்கேற்றது பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter