Wednesday, May 21, 2025

FLASH NEWS : அதிரை அருகே பட்டாசு வெடித்து சிறுவனின் கை சிதறியது !!

spot_imgspot_imgspot_imgspot_img

நாளைய தினம் தீபாவளி பண்டிகை நாடெங்கிலும் கோலாகலமாக கொண்டாட தயாராகி வருகின்றனர்.

இந்த நிலையில் அதிரை அருகே உள்ள உள்ளூர் புதுக்கோட்டையில்  தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறுவர்கள் அனைவரும் பட்டாசு வெடித்துள்ளனர்.

அதில் அப்பகுதியை சேர்ந்த பத்தாம் வகுப்பு முடித்த சிறுவன் தினேஷ் குமாரும் நண்பர்களுடன் சேர்ந்து பட்டாசு வெடித்துள்ளார். அப்போது ஆபத்தை உணராத தினேஷ் குமார் பட்டாசை கையில் வைத்து வெடித்துள்ளார். இதனால் கையிலேயே அந்த பட்டாசு வெடித்ததால் அவருடைய  இரண்டு விரல்கள் முழுவதுமாக சேதமடைந்துள்ளது. இரண்டு விரல்கள் துண்டிக்கப்பட்ட நிலையில் அவர் அதிரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவ்விபத்தினால் உள்ளூர் புதுக்கோட்டை பகுதியை சேர்ந்த பொதுமக்கள் 50க்கும் மேற்பட்டோர் அதிரை அரசு மருத்துவமனையில் குவிந்துள்ளனர். இதனால் அதிரை அரசு மருத்துவமனை பரபரப்பாக காணப்படுகிறது.

பொதுமக்கள் அனைவரும் பட்டாசு வெடிக்கும்போது அதன் விபரீதத்தை அறிந்து மிக கவனமாகவும் பாதுகாப்பான முறையிலும் வெடிக்க வேண்டும். ஆபத்தான முறையில் பட்டாசு வெடிப்பதால் ஏற்படும் விளைவுகளை உணர்ந்து பாதுகாப்பான முறையில் வெடித்தால் மட்டுமே இது போன்ற கோர விபத்துகளை தடுக்க இயலும்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

மரண அறிவிப்பு ஹாஜி நூருல் அமீன் அவர்கள்..

அதிராம்பட்டினம் நடுத்தெருவை சேர்ந்த மர்ஹூம் செ.சி.அ.சித்திக் முஹம்மது அவர்களின் மகனும், மர்ஹூம் மு.செ.மு.முகம்மது தம்பி அவர்களின் மருமகனும் செ.சி.அ.செய்து முஹம்மது புகாரி அவர்களின்...

அதிராம்பட்டினம் ரூரல் டெவலப்மெண்ட் அசோசியேசன்(ARDA) மற்றும் ஷிஃபா மருத்துவமனை இணைந்து நடத்தும்...

அதிராம்பட்டினம் ரூரல் டெவலப்மெண்ட் அசோசியேசன்(ARDA) மற்றும்அதிரை ஷிஃபா மருத்துவமனை இணைந்து நடத்தும் இலவச மருத்துவம் மற்றும் இரத்த பரிசோதனை முகாம் வருகின்ற 01-05-2025...

மரண அறிவிப்பு பாத்திமா அம்மாள்.

ஆஸ்பத்திரி ரோட்டை சேர்ந்த மர்ஹூம் ஈ. சே.மு. முகமது ஹுசைன் மரைக்காயர் அவர்களின் மகளும், மர்ஹூம் ஈ. சே. மு. முகமது முகைதீன்...
spot_imgspot_imgspot_imgspot_img