Thursday, February 12, 2026

FLASH NEWS : அதிரை அருகே பட்டாசு வெடித்து சிறுவனின் கை சிதறியது !!

spot_imgspot_imgspot_imgspot_img

நாளைய தினம் தீபாவளி பண்டிகை நாடெங்கிலும் கோலாகலமாக கொண்டாட தயாராகி வருகின்றனர்.

இந்த நிலையில் அதிரை அருகே உள்ள உள்ளூர் புதுக்கோட்டையில்  தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறுவர்கள் அனைவரும் பட்டாசு வெடித்துள்ளனர்.

அதில் அப்பகுதியை சேர்ந்த பத்தாம் வகுப்பு முடித்த சிறுவன் தினேஷ் குமாரும் நண்பர்களுடன் சேர்ந்து பட்டாசு வெடித்துள்ளார். அப்போது ஆபத்தை உணராத தினேஷ் குமார் பட்டாசை கையில் வைத்து வெடித்துள்ளார். இதனால் கையிலேயே அந்த பட்டாசு வெடித்ததால் அவருடைய  இரண்டு விரல்கள் முழுவதுமாக சேதமடைந்துள்ளது. இரண்டு விரல்கள் துண்டிக்கப்பட்ட நிலையில் அவர் அதிரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவ்விபத்தினால் உள்ளூர் புதுக்கோட்டை பகுதியை சேர்ந்த பொதுமக்கள் 50க்கும் மேற்பட்டோர் அதிரை அரசு மருத்துவமனையில் குவிந்துள்ளனர். இதனால் அதிரை அரசு மருத்துவமனை பரபரப்பாக காணப்படுகிறது.

பொதுமக்கள் அனைவரும் பட்டாசு வெடிக்கும்போது அதன் விபரீதத்தை அறிந்து மிக கவனமாகவும் பாதுகாப்பான முறையிலும் வெடிக்க வேண்டும். ஆபத்தான முறையில் பட்டாசு வெடிப்பதால் ஏற்படும் விளைவுகளை உணர்ந்து பாதுகாப்பான முறையில் வெடித்தால் மட்டுமே இது போன்ற கோர விபத்துகளை தடுக்க இயலும்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தில் DRM ஆய்வு: தாம்பரம் – செங்கோட்டை ரயில்...

திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் (DRM) அவர்கள் இன்று அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது ரயில் நிலையத்தின் பராமரிப்பு,...

ஹாஜி மர்ஹும் தாஜூதீன் அவர்களின் நினைவலைகள்.(ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தில் புகழாரம்)

மறைந்த ஹாஜி எம்.எஸ். தாஜுதீன் அவர்கள் சமூகத்திற்கு ஆற்றிய சேவைகள் அளப்பரியவை; அவர் தொடாத சேவைத்துறை எதுவும் இல்லை என ஷம்சுல் இஸ்லாம்...

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...
spot_imgspot_imgspot_imgspot_img