கொரோனா பீதி காரணமாக பொதுமக்கள் வீடுகளிலேயே முடங்கி உள்ளனர். இந்நிலையில் அதிரையில் சாதாரண சிகிச்சைக்கு மருத்துவர்கள் பணியில் உள்ளனரா என்ற குழப்பம் அதிரையர்கள் மத்தியில் உருவாகியுள்ளது. பலர் அதிரை எக்ஸ்பிரசை தொடர்புக்கொண்டு பணியில் இருக்கும் மருத்துவர்கள் குறித்து கேட்டறிந்தனர். இதனை தொடர்ந்து அதிரையர்களின் நலனை கருத்தில் கொண்டு சேவையாற்றும் மருத்துவர்களின் விபரங்களை சேகரித்து தற்போது அதிரை எக்ஸ்பிரஸ் வெளியிட்டுள்ளது.